
கோலாலம்பூர், மே 20- கிர்கிஸ்தான், கசகஸ்தான் மற்றும்
உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் மேற்கொண்ட பயணம் 210 கோடி வெள்ளிக்கும் அதிகமான
முதலீட்டு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் வழி
மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்குரிய வாய்ப்பு
கிட்டியுள்ளது.
இந்த மூன்று நாடுகளுக்கான பயணம் குறித்து நான் பொதுவில்
மனநிறைவு கொள்கிறேன். மலேசியாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும்
இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தை இந்த பயணம்
ஏற்படுத்தியுள்ளது என்று அன்வார் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
bernama

