ஏப்ரல் மாதம் விமான நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை 7.6 விழுக்காடு அதிகரிப்பு!

கோலாலம்பூர், மே 20- மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் (எம்.ஏ.எச்.பி.)
கட்டுப்பாட்டிலுள்ள விமான நிலையங்களில கடந்த ஏப்ரல் மாதம்
பயணிகள் எண்ணிக்கை 7.6 விழுக்காடு அதிகரித்து 1.1 கோடி பேராக
பதிவானது. அதற்கு முந்தைய மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை 1
கோடியே 20 லட்சம் பேராக இருந்தது.

கடந்த மார்ச் மாதம் 71 லட்சமாக இருந்த மலேசியாவிலுள்ள உள்ளுர்
விமான நிலையங்களின் பயணிகள் எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 76
லட்சமாக உயர்வு கண்டதாக அந்த விமான நிர்வகிப்பு நிறுவனம்
தெரிவித்தது.

உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம 32 லட்சம்
பேராக இருந்த வேளையில் ஏப்ரல் மாதம் அந்த எண்ணிக்கை 37 லட்சம்
பேராக அதிகரிப்பைக் கண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles