போதைப் பொருள் விநியோகம் முறியடிப்பு!

ஈப்போ, மே.23:

கடந்த திங்கட்கிழமை லங்காப் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் 9 கிலோகிராம் (கிலோ) ஹெராயினுடன் சட்டவிரோத அந்நிய நாட்டவரை கைது செய்து, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை போலீசார் வெற்றிகரமாக முறியடித்தனர்.

வேலையில்லாத சந்தேக நபர், கடந்த மார்ச் மாதம் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழையத் தொடங்கியதில் இருந்து, அண்டை மாநிலங்களிலிருந்து தெற்கே போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என்று
பேராக் காவல்துறைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி கூறினார்.

40 வயதான இந்தோனேசிய நபரை, ஹீலிர் பேராக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் காவல்துறைக் குழு கைது செய்தது.

சம்பந்தப்பட்ட வீட்டில் நடந்த சோதனையில், 9,010 கிராம் எடையுள்ள ஹெராயின் அடங்கிய 20 வெளிப்படையான நெகிழி பாக்கெட்டுகள் 110,000 ரிங்கிட் மதிப்புடையது என மதிப்பிடப்பட்டுள்ளது. அவை ‘ரோஸ் கோல்ட்’ ஜிப் செய்யப்பட்ட சக்கர பையில் வைக்கப்பட்டிருந்தன.

பவஅவரைப் பொறுத்தவரை, முதல் கட்ட சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபருக்கு “மெத்தபேட்டமைன்” போதைப் பொருளை உட்கொள்பவராக கண்டறியப்பட்டது. ஆனால் அவரிடம் முந்தைய குற்றவியல் பதிவு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles