
புதுடில்லி ஜூன் 5-
இந்திய அரசியல் சாணக்கியன் என தன்னை அழைத்துக் கொள்ளும் அமித்ஷா தன் வலையில் தானே சிக்கிக் கொண்டார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தன்னை ராஜா என அழைக்கும் அமித்ஷா ஒவ்வொரு கதவையும் தட்டி கையேந்தி நிற்கிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
நேற்று நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று முழங்கிய பாரதிய ஜனதா கூட்டணி 291 இடங்களில் மட்டுமே வென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

