சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசமும், ஐ.ஜ.தளமும் பாஜகவை நிர்பந்திப்பதால் பெரும் நெருக்கடி!

புதுடில்லி, ஜூன் 5-!
மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

மக்களவை சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர தெலுங்கு தேசமும், ஐ.ஜ.தளமும் பாஜகவை நிர்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்குதேசமும், ஐக்கிய ஜனதா தளமும் ஆதரவு அளித்தால் மட்டுமே பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும். எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சபாநாயகர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

2 முறை பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜக சபாநாயகர் பதவியை விட்டுத்தருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவியை இருகட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது டிடிபி பாலயோகிக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்பட்டதை சந்திரபாபு நாயுடு சுட்டிக் காட்டியுள்ளார்.

தெலுங்குதேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆட்சியை தக்க வைக்க ஆதரவு கட்சிகளுக்கு துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles