மாற்றுத் திறனாளியைத் தாக்கிய மெய்க்காப்பாளரிடம் புக்கிட் அமான் விசாரணை

கோலாலம்பூர், ஜூன் 6- இங்குள்ள ஹோட்டல் முகப்பிடத்தில் மாற்றுத்
திறனாளி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் பிரமுகர் ஒருவரின்
மெய்க்கப்பாளரிடம் விசாரணை நடத்தப்படுவதை புக்கிட் அமான்
உயர்நெறி மற்றும் தர பின்பற்றல் துறை (ஜிப்ஸ்) உறுதிப்படுத்தியது.

காவல் துறை உறுப்பினர் சம்பந்தப்பட்ட கட்டொழுங்கு விவகாரத்தை இந்த
விசாரணை மையமாகக் கொண்டுள்ளதாக அதன் இயக்குநர் டத்தோ
அஸ்ரி அகமது கூறினார்.

கட்டொழுங்கு தொடர்பான இந்த விசாரணைக்கு உதவும் பொருட்டு இந்த
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான இ-ஹெய்லிங் வாடகை கார் ஓட்டுநர்
நேற்று காலை 11.00 மணியளவில் புக்கிட் அமானுக்கு
அழைக்கப்பட்டிருந்தார். வழக்கறிஞர் மற்றும் மொழி பெயர்ப்பாளருடன்
அவர் புக்கிட் அமான் வந்திருந்தார்.

விசாரணை தற்போது தொடக்க கட்டத்தில் உள்ளதோடு விசாரணையை
முழுமைப்படுத்துவதற்கு இதர சாட்சிகளையும் ஜிப்ஸ் அழைக்கும் என
அவர் குறிப்பிட்டார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles