வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்க சிலாங்கூர் வாசிகளுக்கு அழைப்பு!

ஷா ஆலம், ஜூன் 27: எதிர்வரும் சனிக்கிழமை அன்று பத்தாங் காலி டத்தோ அப்துல் ஹமிட் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் ஜோப்கேர் வேலை வாய்ப்பு சந்தையில் கலந்து கொள்ள சிலாங்கூர்வாசிகள் அழைக்கப் படுகிறார்கள்.

பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வருகையாளருக்கு சமீபத்திய வேலை காலியிடங்களை அறிமுகப்படுத்த முகப்பிடங்களை திறக்க உள்ளதாகச் சிலாங்கூர் தொழிலாளர் பிரிவு (யூபிபிஎஸ்) தெரிவித்தது.

“எதிர்வரும் சனிக்கிழமை அன்று ஜோப்கேர் வேலைவாய்ப்பு கண்காட்சி நடைபெறவுள்ளதாக மனித வளத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு அறிவித்தார்.

“இத்திட்டம் வேலை தேடுபவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூகத்தில் வேலை வாய்ப்புகளை பற்றி அறிவிப்பதற்கும் மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு பகுதியாகும்” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles