

கோலாலம்பூர் ஜூலை 29-
மலேசிய இந்து சங்கத்தின் பெட்டாலிங் ஜெயா மாவட்ட பேரவையின் 46 ஆம் ஆண்டு திருமுறை ஓதும் விழா இன்று பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் விமர்சையாக நடைபெற்றது.
மொத்தம் ஆறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த விழாவில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மலேசிய இந்து சங்கத்தின் பெட்டாலிங் ஜெயா மாவட்ட பேரவையின் தலைவர் கீர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த திருமுறை விழா ஏற்பாட்டுக் குழு தலைவராக டாக்டர் பி.சோதிலிங்கம் பரஞ்சோதி பொறுப்பேற்று திறம்பட நடத்தினார்.
திருமுறை ஓதும் விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பிறப்பிக்கப்பட்டன.

