வயநாடு நிலச்சரிவில் 9 தமிழர்கள் உட்பட 162 உயிரிழப்பு: ஆற்றில் மிதந்து வந்த 60 உடல்கள் மீட்பு.

திருவனந்தபுரம், ஜூலை 31-
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 9 தமிழர்கள் உட்பட 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 தமிழர்கள் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தோண்டத் தோண்ட உடல்கள் இருப்பதாக மீட்புக்குழுவினர் அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளனர்.

மண்ணில் சிக்கியுள்ள 400 குடும்பத்தினரை மீட்பதற்காக ராணுவம்,விமானப்படை, கடற்படை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 60 பேரின் உடல்கள் பல கிலோ மீட்டர் தூரம் சாலியாற்றில் மிதந்து வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.மலப்புரத்தில் உள்ள சாலியாற்றில் 60 பேரின் உடல்களையும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்டனர்.

இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று வயநாடு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளியுங்கள்..!!
Account Number: 67319948232
Name: Chief Minister’s Distress Relief Fund
Bank: State Bank of India

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles