ஆகஸ்ட் 4 ஆம் தேதிபத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் கல்வி யாத்திரை!

கோலாலம்பூர், ஆக 1-
பத்துமலை திருத்தலத்தில் ஆகஸ்ட் 4 இல் ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரை மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று அந்நிலையத்தின் தோற்றுநரும் இயக்குநருமான டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா கூறினார்.

காலை 8.30 மணிக்கு மேல் நடைபெறும் இந்த கல்வி யாத்திரையில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

இந்திய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்குவதே ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் இலக்காகும்.

1982ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஶ்ரீ முருகன் நிலையம் இது வரையிலும் 28,000க்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரிகளை உருவாக்கி உள்ளது.

இந்த நாட்டில் இந்தியர்கள் கல்வி மூலமாகவே முன்னேறி வெற்றியடைய முடியும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles