
நாட்டில் உள்ள இந்திய தொழில் துறைகள் எதிர்நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர் பிரச்சனைக்கு நல்ல முறையில் தீர்வு காண போராடி கொண்டிருக்கிறோம் என்று மைக்கி எனப் படும் மலேசிய இந்தியர் வர்த்தக தொழில் சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு எந்த அரசாங்கம் வந்தாலும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண்போம் என்று அவர் சொன்னார்.
மலேசியா இந்தியர் முடித்திருத்தும் சங்கத்தின் 21 ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தை தொடக்கி வைத்த போது அவர் இதனை தெரிவித்தார்.
சங்கத்தின் தலைவர் டாக்டர் சுதந்திரன், செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஆண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

