
தேசிய முன்னணி மற்றும் அம்னோவை இனியும் மலேசியர்கள் நம்பி வாக்களிக்க மாட்டார்கள் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
தேசிய முன்னணி காலம் மலையேறிவிட்டது.
மலேசியர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் மலேசியர்கள் கண்டிப்பாக பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வார்கள்.
இனி என்னா சொன்னாலும் ஊழல் பெருச்சாளிகளின் பேச்சை நம்புவதற்கு மலேசியர்கள் தயாராக இல்லை என்று அவர் சொன்னார்.
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்கும் தருணம் வந்துவிட்டது என்றார் அவர்.

