
கோலாலம்பூர் ஆக 13-
நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு ஆடி மாதம் 31 ஆம் தேதி ( ஆங்கிலம் 16-8-2024) துவாதசி திதியும் பூராடம் நட்சத்திரமும் வரலட்சுமி விரதமும் கூடிய ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் 108 சங்க அபிஷேகமும் சண்முகார்ச்சனையும் மிகவும் விமர்சியாக நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணிக்கு சங்காபிஷேகம், 3.00 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு நித்திய பூஜையும் நடைபெறும்.
மாலை 6:00 மணிக்கு சண்முகார்ச்சனையும் தீபாராதனையும் நடைபெறும்.
அதன் பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் பரிமாறப்படும்.
அன்பர்கள் யாவரும் வருகை தந்து இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளும்படி குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் அன்போடு கேட்டுக் கொள்கிறார்

