

காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் செப். 13-
மலாக்கா மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு இளம் தொழில் முனைவர் அலிக்கு டத்தோ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அந்த வகையில் டத்தோ விருது பெற்ற டத்தோ அலியை தமிழ் ஊடகச் செய்தியாளர்கள் வாழ்த்து கூறி அவருக்கு சிறப்பு செய்தனர்
டத்தோ அலி பல ஆண்டுகளாக தமிழ் பத்திரிக்கைக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில் இன்று அவரின் சேவைக்கு கிடைத்த விருதை முன்னிட்டு செய்தியாளர்கள் அவருக்கு சிறப்பு செய்தனர்.
மூத்த செய்தியாளர் செ.வே முத்தமிழ் மன்னன், உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரன் பச்சைமுத்து ஆகியோர் டத்தோ அலிக்கு பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து பாராட்டினார்.

