


மா. பவளச்செல்வன்
ஷா ஆலம் செப் 15-
இந்நாட்டில் இந்திய சமுதாயத்திற்கு சேவை செய்யும் ஒரே கட்சி ம இகா மட்டுமே.
மஇகாவை போல் இன்னொரு கட்சி
இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்றிட முடியாது என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நாட்டில் ம இகா வை போன்று இனி ஒரு கட்சி வர முடியாது.
அதேசமயம் ம.இ.காவை போன்று இனியொரு கட்சி சேவை செய்ய முடியாது. இதனை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்று
அவர் சொன்னார்.
இன்று ஷா ஆலம் ஐடிசிசி மண்டபத்தில் ம.இ.காவின் 78ஆவது மாநாட்டில் பேராளர்கள் முன்னிலையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பெரும் உற்சாகத்துடன் கொள்கை உரையாற்றினார்.
ம.இ.கா நிதி வளத்தை பெருக்கும் நோக்கத்தில் பல திட்டங்களை முன்னேடுத்துள்றள்ளது.
இதில் மூன்று கோபுரங்கள் அடங்கிய ம.இ.கா கட்டட திட்டமும் அடங்கும்.
இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் ஆண்டுக்கு 35: மில்லியன் வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால் ம.இ.கா சுயகாலில் தனித்து நிற்கும் என்று அவர் சொன்னார்.

