
நாட்டின் தலையெழுத்தை எழுதப் போகும் முக்கிய நாளாக நாளை நவம்பர் 19 ஆம் தேதி சனிக்கிழமை விளங்குகிறது.
மாற்றத்தை ஏற்படுத்தும் மகாத்தான சக்தி மக்களே.
மக்கள் பணத்தை கொள்ளையடித்தது உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் நம்பிக்கை துரோகிகளுக்கு முடிவு கட்டும் முக்கிய நாளாக சனிக்கிழமை விளங்குகிறது.
ஆகவே மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும் படி பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
எனது இனிய நண்பர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நாளை மலரும் பக்கத்தான் ஹரப்பானின் புதிய ஆட்சியில் மலேசியா இந்தியர்களின் நலன்கள் காக்கப்படும் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

