சிலாங்கூரை வலுவாக தற்காப்போம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அடுத்த தவணைக்கான பிரதமராக தக்கவைத்துக் கொள்வோம் – மந்திரி புசார்

பெட்டாலிங் ஜெயா, செப் 30-
சிலாங்கூர் மக்கள் நீதிக் கட்சியின் (கெடிலான்) மாநிலத் தலைமைக் குழுவின் (எம்பிஎன்) தலைவர் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, சிலாங்கூர் மாநிலத்தை கட்சியின் வலுவான கோட்டையாக தக்கவைக்க அனைத்து இயந்திரங்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பணிகளை செம்மையாக ஒழுங்கமைப்பது டன், இயந்திரங்களும் நேரத்தை வீணடிக்காமல், கட்சியின் போராட்டம் தொடர்பான தகவல்களைத் தீவிரமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

“கடவுள் விரும்பினால், இந்தப் போராட்டத்தின் மூலம், சிலாங்கூரை இன்னும் வலுவாக பாதுகாப்பது மட்டுமன்றி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஐயமின்றி அடுத்த தவணைக்கான பிரதமராக தக்கவைத்துக் கொள்ளவும் முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் கினி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles