

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் மொத்தம் 10 இந்தியர்கள் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்
டமான்சாராவில் கோபிந்த் சிங் டியோ, கிள்ளானில் கணபதிராவ், சிகாமாட்டில் யூனிஸ் வரன், ஈப்போ பாராட்டில் எம். குலசேகரன், பத்து காஜாவில் வி சிவகுமார், சுங்கை சிப்புட்டில் கேசவன், ஜெலுத்தோங்கில் ராயர், புக்கிட் குளுக்கோரில் ராம் கர்ப்பால் சிங் ,பத்துவில் பிரபாகரன் ஆகியோர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் டத்தோ ரமணன் வெற்றி பெற்றுள்ளார்.
தாப்பாவில் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி,உலு சிலாங்கூரில் டாக்டர் சத்யா பிரகாஷ், கோலலங்காட்டில் மணிவண்ணன் ஆகியோர் குறுகிய வாக்குகளில் தோல்வி கண்டுள்ளனர்.

