
பத்துகாஜா,அக்13: கம்போங் பியாண்டாங் சமூக மண்டபத்தை தரம் உயர்த்தவும் அதனை தற்போது இருக்கும் சூழலைவிட பெரிதாக உருமாற்றம் செய்யவும் கிராம மேம்பாட்டு நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதனை தாம் கவனத்தில் கொண்டு ஆவணம் செய்வதாக பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் குறிப்பிட்டார்.
அவர்களின் கோரிக்கைகள் சரியானதே என்றும் குறிப்பிட்ட சிவகுமார் இங்குள்ள மக்களின் பயன்பாட்டிற்காக அமைந்திருக்கும் ஒரே ஒரு மண்டபமான இம்மண்டபத்தை கூடுதல் வசதிகளோடு தர உருமாற்றத்தை மேற்கொள்வதை தாம் வரவேற்பதாகவும் அது மேலும் பெரும் நன்மையையும் பயனையும் இங்குள்க மக்களுக்கு வழங்குமென தாம் நம்புவதாகவும் கூறினார்.
மேலும்,மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் இந்த மண்டபம் தற்காலிய வெள்ளத் துயர் துடைப்பு மையமாக செயல்பட்டு வருவதையும் சுட்டிக்காண்பித்த அவர் இம்மண்டபத்தின் உருமாற்றக் கோரிக்கை காலத்திற்கு உகர்ந்தது என்றும் விவரித்தார்.
அதுமட்டுமின்றி,மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பயன்பாட்டுக்காகவும் கிராமத்து மேம்பாட்டு நிர்வாகம் மண்டபத்தின் உருமாற்று கோரிக்கையோடு நாற்காலி,மேசைகளோடு குளிரூட்டி வசதிகளையும் செய்து கொடுக்குமாறு வைத்த கோரிக்கை நியாயமானது எனவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவு செய்வது நாடாளுமன்ற உறுப்பினராய் தனது கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக தேசிய பல்கலைக்கழகத்தின் தன் கல்வியை தொடர்ந்துள்ள மாணவர் ஒருவருக்கு அம்ம்ணடபத்தின் அம்மாணவரின் தாயாரிடன் கல்வி நிதிக்கான காசோலையை மாண்புமிகு சிவகுமார் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,பத்துகாஜா தொகுதியை பொருத்தமட்டில் கல்வி,சமயம்,பொருளாதாரம்,சமூகநலன் உட்பட அனைத்து விவகாரத்திலும் இனம்,மொழி,மதம் கடந்து பல்லின மக்களுக்கும் ஆக்கப்பூர்வமான சேவையையும் பங்களிப்பையும் நாடாளுமன்ற உறுப்பினராய் நிறைவாய் செய்து வருகிறார் மாண்புமிகு சிவகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.