
சென்னை: அக் 29-
“பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. பாசிசம் என்னால் என்னவென்று அவர் உணர்ந்திருக்கிறார் என்று தெரியவில்லை. விஜய்யின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் தெரிகிறது” என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
“நடிகர் விஜய் ஒரு முன்மொழிதலை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியிருக்கிறார். அவை அனைத்துமே பல்வேறு கட்சிகளால் முன்மொழியப்பட்டவைதான்.
ஒன்றைத் தவிர. கூட்டணி ஆட்சிக்கு அவர் அச்சாரம் போட்டிருக்கிறார். ஆனால் ஆட்சிக்கு ஒருவேளை வரும் சூழலில் இந்த நிலைப்பாட்டை அவர் எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எங்களுக்காக வைக்கப்பட்ட கோரிக்கை என்பதை நாங்களே கற்பனை செய்துகொள்ள முடியாது.
திமுகவை பொது எதிரி என்று அறிவித்திருப்பதும் திமுக கூட்டணியை குறிவைத்திருப்பதும் தான் நடிகை விஜய்யின் ஒட்டுமொத்த உரையின் சாரம்.
என்னைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

