
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் நவ 16-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான தேசிய கால்பந்து போட்டி வரும் டிசம்பர் மாதம் 7,8 ஆம் தேதிகளில் பினாங்கு யூஎஸ்எம் அறிவியல் பல்கலைக்கழக கோப்பா அரினா திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று மீபா தலைவர் அன்பநாதன் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீபா ஏற்பாட்டில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்கள் பிரிவில் 40 மாநில தமிழ்ப் பள்ளி குழுக்களும் பெண் பிரிவில் 40 குழுக்களும் இந்த போட்டியில் பங்கேற்கிறது. என்று அவர் சொன்னார்.

மாணவர்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு டத்தோ என்.எஸ். மணியம் கிண்ணம் மாணவிகள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு அன்னை மங்களம் கிண்ணமும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
இரண்டு தினங்களில் நடக்கும் இந்த போட்டி சாதனை படைக்கும் என்று அவர் சொன்னார்.
மூன்று லட்சம் வெள்ளி செலவில் நடத்தப்படும் இந்த போட்டிக்கு மிகப்பெரிய ஆதரவு தேவைப்படுகிறது என்று அவர் சொன்னார்.
சுமார் 6,000 பேர் இந்த போட்டிய காண படையெடுப்பார்கள் என்றார் அவர்.
இதனிடையே இதே தினத்தில் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த தமிழ் பள்ளி பாலர் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பியோண்ட் கிட்ஸ் கிண்ணக் கால்பந்து போட்டியும் மற்றோர் திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூரில் மீபா உச்சமன்ற கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மீபா துணை தலைவர் ஏஎஸ்பி இராஜன், உதவித் தலைவர் ஸ்ரீ சங்கர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

