318,642 சிறு தொழில் செய்பவர்களுக்கு RM127.4 மில்லியன் மழைக்கால உதவியாக (BMT) அரசாங்கம் ஒதுக்கீடு !

ஷா ஆலம், டிச 3: நாடு முழுவதும் 318,642 சிறு தொழில் செய்பவர்களுக்கு அரசாங்கம் RM 127.4 மில்லியன் மழைக்கால உதவியாக (BMT) ஒதுக்கீடு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட சிறு விவசாயிகளுக்கு தலா RM400 கிடைக்கும்.

அதாவது நவம்பர் மற்றும் இம்மாதம் இரண்டு முறை தலா RM200 செலுத்தப்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இந்த உதவியானது ரப்பர் தொழில் சிறு தோட்டக்காரர்கள் மேம்பாட்டு ஆணையம் (RISDA), மத்திய நில மேம்பாட்டு வாரியம் (Felda) மற்றும் சபா ரப்பர் தொழில் வாரியம் (LIGS) ஆகியவற்றை உள்ளடக்கியது என்று கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அஹ்மட் ஜாஹிட் கூறினார்.

மேலும், கிளந்தான் மற்றும் திரங்கானுவில் உள்ள தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்கி உள்ளவர்களில் 20 முதல் 25 சதவீதம் பேர் வெள்ளம் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து படிப்படியாக வீடு திரும்பத் தொடங்குவார்கள் என்று அஹ்மட் ஜாஹிட் கூறினார்.

பகாங் மற்றும் ஜோகூரில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

ஏனெனில் கிளந்தான் மற்றும் பகாங்கில் இருந்து தண்ணீர் சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களுக்கும் சென்றடையக்கூடும்

இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles