

ஈப்போ, டிச.26: கூலிம் கெடா மாநிலத்தைச் சேர்ந்த காலம் சென்ற நாகு சுப்பிரமணியத்தின் பேத்தியும், ஜூரு பினாங்கு மாநிலத்தில் வசிக்கும் சு.பாலுவின் புதல்வியுமான பிரியதர்சினி பாலு, ஈப்போவிலுள்ள ஸ்குவாஷ் பல்கலைக்கழகத்தில்
டாக்டர் பட்டம் பெற்றார்.
இத்தருணத்தில் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு ஊக்குவிப்பாய் இருந்தவர்கள் எனது இரு கண்களான தந்தையும், தாயுமே என்பதில் பெருமை கொள்வதாக பிரியதர்ஷினி கூறினார்.
தம் தகப்பனார் டாக்டர் சு.பாலு தாயார் ஆசிரியை வ. சாந்தி , மூத்த மகளாக டாக்டர் பா.பிரியதர்சினி, இளைய மகளாக
பா. லோகதர்சினி என்பதுதான் எங்களின் இனிய குடும்பமாகும்.

