
பிறை டிச 30-
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பினாங்கு மாநில பிறை சட்டமன்ற தொகுதியில் கிறிஸ்துமஸ் பொது உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பிறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநில முதல்வர் சாவ் கூன் இயோ, பிறை எம்பிபிகே தலைவர் ஸ்ரீ சங்கர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னிசை விழாவுடன் நடைபெற்ற இந்த பொது உபசரிப்பில் அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.

