கத்தார் ஆசியா சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில்12 தங்கத்தை வாரி குவித்தது மலேசியா!

கட்டார், டிச 30-
கத்தாரில் நேற்று நடைபெற்ற ஆசிய ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசிய சிலம்பம் அணி 12 தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியனாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளது.

மலேசியா சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் எம் சுரேஸ் கூறுகையில், டோஹா விளையாட்டு வளாகத்தில் தனிநபர் மற்றும் போர்த் திறன் பிரிவுகள் மூலம் ஆறு மலேசிய தேசிய விளையாட்டு வீரர்கள் தலா இரண்டு தங்கம் வென்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

60 கிலோவுக்கு மேல் (கிலோ) ஆண்கள் பிரிவில் பிரகாஷ், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஷஸ்திவேனா (55 கிலோ-65 கிலோ), லீனாஸ்ரீ (30 கிலோ-40 கிலோ), கவித்திரா (45 கிலோ-55 கிலோ), தர்னிஷா (55 கிலோ) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

மேலும் 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ராணிஷா தங்கப் பதக்கம் பெற்றார்.

போட்டியை நடத்திய கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்ததாக டாக்டர் சுரேஸ் கூறினார்.

இந்த போட்டியில் இந்தியா மற்றும் சவுதி அரேபியாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஆசிய ஓப்பன் சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் மலேசிய சிலம்ப விளையாட்டு வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்தி 12 தங்கம் வென்றுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக டாக்டர் சுரேஷ் தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles