

ஈப்போ சங்கீத பரத கலாஞ்சலி நாட்டியப் பள்ளி மாணவிகளில் சலங்கை பூஜை நடைபெற்றது.
அறுவர் பங்கேற்ற இந்த பரத நாட்டிய நிகழ்வு ஈப்போவில் உள்ள அருள் மிகு தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
இப்பள்ளி நடன ஆசிரியை உஷா நந்தினி கிருஷ்ணசாமி ஆசிரியராக கொண்டு செயல்பட்டு வருகிறது.
யாஷ்மித்தா தேவி டேவ் அனந் , பாவித்ரா மோர்கன், சாஷிலா நாயர் பாஸ்கரன், தாஷகா ஸ்ரீ பாலமுருகன், திவ்வியஸ்ரீ ரகு , ரஷானா சந்திரசேகரன் ஆகியோர் சலங்கை பூஜை கண்டதாக நடன ஆசிரியை ஸ்ரீ மதி உஷா நந்தினி கிருஷ்ணசாமி கூறினார்
இந்த சலங்கை பூஜையைக் காண 300க்கும் மேற்பட்டோர்
வருகை புரிந்தனர்.
கடந்த 30 ஆண்டுகாலமாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் நடனம் பயின்ற மாணவிகளில் 17 அரங்கேற்றம் கண்டதுடன் 30 க்கும் மேற்பட்ட சலங்கை பூஜைய முடித்துள்ளதாக அவர்தெரிவித்தார்.

