
கோலாலம்பூர் ஜன 30-
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழா நேற்று dewan komunity koparasi polis 2 Batu muda மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசியல் கட்சி தலைவர்கள், அரசு சார்பற்ற அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த தருணத்தில் தகவல் தொடர்பு துறை அமைச்சர்
மாண்புமிகு பாமி பட்சில் அவர்கள், அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நமது ஊடக நண்பர்களின் குடும்பத் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.
தகவல்களைப் பரப்புவதற்கும், அரசாங்க நிகழ்ச்சிகளுக்குச் சிறந்த அணுகலைப் பெறுவதற்கும் தமிழ் ஊடகவியலாளர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவது மட்டுமல்லாமல் அனைத்து தமிழ் ஊடக நண்பர்களின் நலனிலும் கவனம் செலுத்துவோம் “, என்று அமைச்சர் பாமி பட்சில் குறிப்பிட்டுள்ளார்.

