
தனது கணினியில் சிறார் ஆபாச படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 39 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிள்ளானில் வீடு ஒன்றில் புக்கிட் அமான் பாலியல் பெண்கள் சிறார் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை போது அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டிருக்கும் ஆடவர் சிறார்களை தொடர்பு கொண்டு சமூக ஊடகங்களில் இருந்து சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வருவதாக அவர் சொன்னார்.
அமெரிக்க புலனாய்வு துறையுடன் இணைந்து போலீஸ் படை மேற்கொண்ட சோதனையில் இந்த ஆடவர் சிக்கி இருக்கிறார்.

