
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதிக்குள் நுழைந்து கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதோடு 251 பேர் பயணக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா முனை மீது கொடூர தாக்குதல் நடத்தியது. பிணைக்கைதிகளை விடுவிப்பதற்காக 2023 நவம்பர் மாதம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100-க்கும் முற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் முறியதாக குற்றம்சாட்டிய இஸ்ரேல், காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்தியது.

