
ரமலான் மாதத்தை வரவேற்கும் முன்னிட்டு ரமலான் பிறை இன்று பார்க்க முயற்சிக்கப்பட்டது, இருப்பினும் பிறை எங்கும் தென்படவில்லை என்று அரச முத்திரைக் காப்பாளர் தெரிவித்தார்.
இன்று மாலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிறை பார்ப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
29 இடங்களில் பிறை பார்க்க முயற்சிக்கப்பட்டது. இருப்பினும் எங்கும் பிறை தென்படாததால் நாளை நோன்பு நோற்க வேண்டியதில்லை என்று அரச முத்திரைக் காப்பாளர் Tan Sri Syed Danial Syed Ahmad தெரிவித்தார்.
எனவே, நாளை மாலை பிறை பார்க்கப்பட்டு இரவு தராவீஹ் தொழுகை நடத்தப்படும். மார்ச் 2ஆம் தேதி முதல் நோன்பு நோற்கப்படும் என்று அவர் கூறினார்

