மியான்மாருக்கு மலேசியா 10 மில்லியன் ரிங்கிட் உதவி – பிரதமர் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 31 – மியான்மாருக்கான உதவிகளை மலேசியா தனது ஆசியான் கூட்டாளிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

மியான்மாரில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 10 மில்லியன் ரிங்கிட் உதவி வழங்கப்படும் என்று மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இந்த பங்களிப்பு 2025 ஆசியான் தலைவராக மலேசியாவின் பொறுப்பையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது என்றும், அடுத்த வாரம் மியான்மாருக்கு ஒரு மனிதாபிமான பணியை வழி நடத்துமாறு வெளியுறவு மந்திரி டத்தோ ஸ்ரீ முகமது ஹாசனுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.

“பிராந்திய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், ஆசியானின் மனிதாபிமான நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதற்கும் மலேசியா உறுதிபூண்டுள்ளது, இது இரக்கம், பகிரப்பட்ட பொறுப்பு மற்றும் ஒற்றுமையில் வேரூன்றியுள்ளது” என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles