
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில் பாலஸ்தீனத்தின் காசா மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 50,000த்தை கடந்துள்ளது.
கடந்த ஜனவரியில் ஏற்பட்ட போர் நிறுத்தம் மார்ச் உடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து மேலும் 50 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அத்தியாவசாய உதவிகள் காசாவுக்குள் செல்லாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் ஹமாஸ் காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என ஆயிரக்கணக்கான பால்ஸ்தீனியர்கள் வடக்கு காசாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

