ஐக்கிய அரபு சிற்றரசுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமை- அமைச்சர் கோபிந்த்

துபாய், ஏப்ரல் 25, 2025 – மலேசியா, ஐக்கிய அரபு சிற்றரசு (UAE), மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகளில், செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

நான்காம் தொழிற்புரட்சிக்கான மையத்தின் (C4IR) உலகளாவிய கூட்டமைவின் கீழ், இந்த மூன்று நாடுகளும் செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளையும், செயற்கை நுண்ணறிவு நிர்வாக நடைமுறைகளைச் செயல்படுத்தும் முறைமைகளையும் சுற்றுவட்டார நாடுகளை ஊக்குவிப்பதற்கும், திறன்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், தொழில்நுட்பத்தின் முழுப் பயனையும் அடைய உதவுவதற்கும் இணைந்து செயல்படும். இதன்வழி செயற்கை நுண்ணறிவு இலக்கவியல் தொழில் நுட்பத்தில் மக்கள் பயனடைவதோடு, பொருளாதாரத்தில் வலுப்பெறவும் உதவும்.

இந்த முயற்சி, Dubai Future Foundation (C4IR-UAE-இன் சட்டப்பூர்வ அமைப்பு), C4IR Rwanda மற்றும் MyDigital Corporation எனப்படும் மலேசிய இலக்கவியல் கூட்டுறவு கழகம் இடையே நேற்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) பரிமாற்றத்தின் வழி உறுதியானது.

தற்போது நடைபெற்று வரும் துபாய் AI வாரத்தையொட்டி இந்தப் புதிய ஒத்துழைப்பு துவக்கம் கண்டது. உலகளாவிய நிலையில், மலேசிய ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளுடன் தொலைநோக்கு முயற்சியில் கைகோர்ப்பது, நாட்டிற்கு பெருமையளிப்பதாக அமைச்சர் கோபிந் சிங் டியோ கூறினார்.

இதன்வழி செயற்கை நுண்ணறிவு துறையில் உலகளாவிய நிபுணத்துவத்தை ஒன்றிணத்து, வலுப்படுத்துவதோடு, நிலையான எதிர்காலத்தை நோக்கி இலக்கவியல் மாற்றங்களை துரிதப்படுத்த முடியும் என தாம் நம்புவதாக அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.

“இந்த ஒத்துழைப்பின் விளைவாக உருவாகும் C4IR செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு திட்டம், கண்டங்கள் முழுவதும் உள்ள செயற்கை நுண்ணறிவு முன்னோடிகளையும் நிபுணர்களையும் இணைக்கும் ஒரு முக்கியமான பாலமாக இருக்கும் என்று இலக்கவியல் அமைச்சர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles