🕊️ பிரபல பாடகர் சிவகுமார் ஜெயபாலனும், தாயாரும் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர் – செராஸில் சோக சம்பவம்!

நாடு முழுவதும் புகழ்பெற்ற பாடகரும் நடிகருமான சிவகுமார் ஜெயபாலன் (வயது 48) மற்றும் அவரது தாயார் (வயது 76) இன்று மதியம் செராஸில் உள்ள தாமான் டேசா பெட்டாலிங்கில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இறந்த நிலையில் காணப்பட்டனர்.

செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடில் போல்ஹாசன் தெரிவித்ததாவது:

“அவர்கள் இருவரும் அந்த கட்டிடத்தின் 11ஆவது மாடியில் இருந்து விழுந்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணையில் நம்பப்படுகிறது. இச்சம்பவம் இன்று மதியம் 12.35 மணியளவில் நடைபெற்றது.”

தற்போது எந்தவொரு குற்றவியல் கூறுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

🕯️ பொதுமக்களுக்கு வேண்டுகோள்:

இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இவரது மறைவு மலேசியாவின் தமிழ்த் திரையுலகத்துக்கும், இசை உலகத்துக்கும் பெரிய இழப்பாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles