
ஜொகூர் பாரு, மே 24-
கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் தேர்தலில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி, தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் வெற்றி பெற்றனர்.
டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி 7,955 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வெற்றி பெற்றார்.
டத்தோஸ்ரீ இரமணன் 5,895 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் 5,889 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லீ காங் 5,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

