கிரிக் சாலை விபத்து – பேருந்து நிறுவன நடத்துநருக்கு காரணம் கோரும் கடிதம்

கோலாலம்பூர், ஜூன் 10 – கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் 53வது கிலோ மீட்டரில் கிரிக்,  தாசேக் பாண்டிங் அருகே நேற்று காலை சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்களின் உயிரைப் பறித்த விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநருக்கு தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (அபாட்)  காரணம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில், 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் மற்றும் 2010 ஆம் ஆண்டு தரைப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பேருந்து மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் தணிக்கையை  சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.)
நடத்தி வருவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

விசாரணை முடிந்ததும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். பறிபோன ஒவ்வொரு உயிரும் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்  என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

பொறுப்பற்ற ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்பு தரங்களை பின்பற்றாத கனரக வாகனங்களால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து  சாலையைப் பயன்படுத்துவோரைப்  பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து சாலைப் பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்தும் என்று அவர்  மேலும் கூறினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles