சிகாம்புட்டில் மூன்று அந்நிய நாட்டினர் கைது – சுடும் ஆயுதங்கள் பறிமுதல்!

கோலாலம்பூர், ஜூலை 1 – சிகாம்புட்டில் உள்ள ஒரு வரிசை  தரை  வீட்டில் நேற்று பிற்பகல்  நடத்தப்பட்ட சோதனையில் மூன்று வெளிநாட்டினரை  கைது செய்து வால்டர் பி99 கைத்துப்பாக்கிகள், எம்4 கார்பைன்கள் மற்றும் கோல்ட் ஏஆர்-15 உட்பட நூற்றுக்கணக்கான போலி துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் உள்ள பல இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில்  35 முதல் 45 வயதுடைய ஒரு பெண் உள்ளிட்ட  மூன்று வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் வனவிலங்கு குற்றப் பிரிவு/சிறப்பு புலனாய்வு புலனாய்வு துணை இயக்குநர் எஸ்.ஏ.சி. ஜைருல்னிசாம் முகமது ஜைனுடின்  கூறினார்.

இந்நடவடிக்கையில் போலி ஹெக்லர் மற்றும் கோச் எம்பி5 துப்பாக்கிகள், சிஇஸட், குளோக் 17, சென்ட் வைப்பர் மற்றும் புரோவ்னிங் கைத்துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் சோதனை நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மீண்டும் பேக்கேஜ் செய்வதற்காக போலி துப்பாக்கிகள்  அந்த வளாகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அவை  சமூக ஊடக தளங்களில் வெளிப்படையாக விற்கப்பட்டன.  பறிமுதல் செய்யப்பட்ட போலி துப்பாக்கிகளின் சந்தை விலைகள் மற்றும் உண்மையான அளவு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

கைதான மூன்று வெளிநாட்டினரும் 1960ஆம் ஆண்டு  ஆயுதச் சட்டத்தின் 36வது பிரிவு,  1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின்  (6)(1)(சி) மற்றும்  39(பி)  பிரிவுகளின் கீழும் விசாரிக்கப்படுவார்கள்.

சமூக ஊடக நடத்துநர்கள் தங்கள் தளங்களில் விற்பனை நடவடிக்கைகளைக் கண்காணிக்குமாறு காவல்துறை அறிவுறுத்துகிறது. ஏனெனில், இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனை கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தை (எம்.சி.எம்.சி.) காவல்துறை வலியுறுத்தும்  என்று ஜெய்ருல்னிசாம் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles