
சென்னை: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், கூட்டணி அமைச்சரவைதான் அமைக்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4வது முறையாக பேட்டி அளித்தார். ஆனால், அதிமுக தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஓட்டம் பிடித்தார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இந்த கூட்டணிக்கு அதிமுகவில் எதிர்ப்பு நிலவி வருகிறது.