ஷம்ரி வினோத் – பிர்டாவூஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது! டத்தோ டாக்டர் லோகபாலா

கோலாலம்பூர், ஜூலை 24-
PPP கட்சி சமீபத்தில் பிரதமரின் துறை (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவலைக் குறித்து கவலையும் மிகுந்த ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

இன, மதத்தைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக நாடெங்கிலும் 900க்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்த போதிலும், ஸாம்ரி வினோத் மற்றும் பிர்டாவூஸ் வோங் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று அவர் கூறியிருப்பது நம்மை நெஞ்சை உடைக்கும் வகையிலும், நாட்டின் சட்ட ஆட்சி அடிப்படைகளை எதிர்த்து நிற்கும் வகையிலும் உள்ளது.

நாம் நாடு ஒருமித்து முன்னேற முயலும் இந்த வேளையில், இனம், மதம் தொடர்பான விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காமை, மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு அச்சம் இன்றி, நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும்.

சமூகங்களை பிளப்பதற்கும், இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை அலட்சியப்படுத்தும் வகையிலும் தொடர்ந்து கருத்துகள் தெரிவிக்கிற, எந்தவிதமான பயமோ தடையோ இன்றி செயல்படுவது ஏற்க இயலாத ஒன்றாகும்.

இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படாதது, சட்டத்தின் தெரிவுசெய்யும் அமல்படுத்தல் (selective enforcement) மற்றும் 3R குற்றங்கள் சட்டப்படி உண்மையாகவும், சமமாகவும் செயல்படுகிறதா என்ற கேள்விகளை ஏற்படுத்துகிறது.

900க்கு மேற்பட்ட புகார்கள் ஒவ்வொன்றும் ஒரு மலேசிய குடிமகனின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது

அவர்கள் சட்டப்பாதையில் நம்பிக்கை வைத்து, அதிகாரப்பூர்வ முறையில் தீர்வை நாடினர். இப்போது நாம் அவர்கள் அனைத்தையும் முக்கியமற்றதாகவே பார்க்கிறோமா?

சட்டம் ஒருவர் யார் என்பதற்கு ஏற்ப மாற்றப்படக்கூடியதா? இனம், மத ஒற்றுமையின் மதிப்பீடுகள் தூக்கிக்கொடுக்கப்படலாம் என்றதுதானா விளக்கம்?

இந்த முடிவு இளைய தலைமுறையிடையே சட்ட நிறுவனங்களின் மீது உள்ள நம்பிக்கையை சிதைக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இது, வெளிப்படையான எதிர்ப்பை மீறியும், வெறுப்பு பேச்சும் தூண்டுதல்களும் எந்தக் கண்காணிப்பும் இல்லாமல் தொடரலாம் என்பதற்கான தீய சைகையை அனுப்புகிறது.

PPP கட்சி மலேசியா, வழக்கறிஞர் மன்றத்தையும், சம்பந்தப்பட்ட எல்லா அமலாக்க அதிகாரிகளையும், ஆதாரங்களை முழுமையாகவும் வெளிப்படையாகவும் மறுஆய்வு செய்ய வலியுறுத்துகிறது.

நாட்டின் பன்முக இன, மதம் மற்றும் அரசியலமைப்புச் சாசனத்தை காத்து நின்று சட்டங்களை மீறுவோர் யார் என்கிறபோதும், உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இனம், மதம் தொடர்பான சட்டம் விருப்பத்திற்குரியது அல்ல – அது நாட்டின் அடிப்படை.

நடைமுறையில் எல்லாம் சரியாக நடக்கிறது என்பதை எல்லா மலேசியர்களும் காண வேண்டும், உணரவேண்டும் என்று
டத்தோக டாக்டர் லோகா பாலா மோகன் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles