
பெந்தோங், ஜூலை 24-
வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் பேரு குறைந்த ஒருவருக்கு மருத்துவ கட்டில் பெற்றுத் தந்து பகாங் பெந்தோங் ம இகா தொகுதி பேருதவி புரிந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
பெந்தோங் மஇகா தொகுதி தலைவர் டாக்டர் ஜெயசந்திரன் அவர்கள் பெந்தோங் மாவட்ட சமூக நல இலாகாவின் உதவியோடு தேவைபடும் பேறு குறைந்தவருக்கு கட்டிலை பெற்று தந்துள்ளார்.
இதன் மூலம் பேறு குறைந்தவர் மருத்துமனையில் பயன்படுத்தும் கட்டியலை பயன் படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
தக்க நேரத்தில் பேருதவி புரிந்த டாக்டர் ஜெயந்திரன் மற்றும் பெந்தோங் சமூக நல இலாகா வுக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

