வைரலான சண்டை காட்சியில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை பள்ளியிலிருந்து இடைநீக்கம்

ஷா ஆலம், ஜூலை 31: சமூக ஊடகங்களில் வைரலான சண்டை காட்சியில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை பள்ளியிலிருந்து மலேசிய கல்வி அமைச்சகம் (MOE) இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், 14 மாணவர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கூறினார்.

“கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பைப் பாதிக்கும் எந்தவொரு சம்பவத்திலும் கல்வி அமைச்சு சமரசம் செய்யாது. பள்ளி சுற்றுச்சூழல் அமைப்பு அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் அப்பள்ளியைப் பார்வையிட்ட பிறகு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் மீட்பு செயல்முறையின் ஒரு பகுதியாக மாவட்ட கல்வி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக சேவை திட்டத்தில் பங்கேற்பார்கள்.

“நல்ல பண்புகளை வளர்ப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்கள் நேர்மறையான வழியில் மாற வழிகாட்டும் தலையீட்டு நடவடிக்கையாக ஆலோசனை அமர்வுகளும் நடத்தப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

பள்ளி கழிப்பறையில் நடந்ததாகக் கருதப்படும் இச்சண்டை சம்பவம் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட பின்னர் வைரலானது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles