

ஷா ஆலம், ஆக 5-
இந்தியர்களின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு எம்ஐஇடி மற்றும் ம இகா விளையாட்டுப் பிரிவு தொடர்ந்து துணை நிற்கும் என்று மஇகா விளையாட்டுப் பிரிவின் தலைவர் அட்ன்ரூ டேவிட் தெரிவித்தார்.
பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான காலபந்து போட்டி கடந்த மாதம் நடைபெற்றது.
இப்போட்டிக்கு மஇகா, எம்ஐஇடி விளையாட்டுப் பிரிவு 20 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கும் என்று ஒப்புக் கொண்டது.

இதன் அடிப்படையில் இந்நிதிக்கான காசோலை பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில பட்டத்து இளவரசரும் சிலாங்கூர் மாநில கால்பந்து சங்கத்தின் தலைவருமான தெங்கு அமீர் ஷா முன்னிலையில் இந்த நிதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவொரு பெருமையான தருணமாக அமைந்தது. இவ்வேளையில் சிலாங்கூர் மாநில பட்டத்து இளவரசருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியர்களின் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு மஇகா, எம்ஐஇடி விளையாட்டுப் பிரிவு துணை நிற்கும் என்று அவர் சொன்னார்.

