

ஈப்போ, ஜாலான் லகாட்டில் உள்ள அரசு மரத்து விநாயகர். ஆலயத்தில் மஹா சங்கட ஹர சதுர்த்தி விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ ருத்ர பிரசன்னம் பஜனைக் குழுவினர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 2 ஆயிரம் பேர் கலத்துக்கொண்டனர்.
இந்த விழாவில் தேர்வு எழுதும் எஸ். பி. எம். , எஸ் .டி. பி் எம். தேர்வு மாணவர்களுடன் இடை நிலை , கல்லூரி மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சிக்கானவும் , உலக அமைதிக்காகவும் , இயற்கை பேரிடர்களிலிருந்து உலகைக் காக்க சிறப்பு பிரார்தனை நடைபெற்றது என்று அதன் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் மு. இளங்குமரன் கூறினார்.
விழாவில் கலந்துக்கொண்ட மணவர்கள் , பொது மக்கள் பால குடங்கள் ஏந்தி வைத்து் காணிக்கை செலுத்தினர்.

