கோட்டா விண்ணப்பங்கள் திறக்கப்பட்டது: வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான வேலை அனுமதி விண்ணப்பங்கள் 2025 டிசம்பர் 31 வரை திறந்திருக்கும்!

கோலாலம்பூர் ஆக 20-
உலோக பொருள் மறுமலர்ச்சி உட்பட பத்து துறைகளுக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு விண்ணப்பம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திறந்திருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

தகுதியான துறைகள்:

  1. விவசாயம் – அனைத்து துணைத் துறைகள்
  2. தோட்டம் – அனைத்து துணைத் துறைகள்
  3. சுரங்கம் – அனைத்து துணைத் துறைகள்
  4. சேவைத் துறைகள் (சில துணைத்துறைகள் மட்டும்):

மொத்த & சில்லறை விற்பனை

நிலக் களஞ்சியம்

பாதுகாவலர்கள்

உலோகப் பொருள் மறுமலர்ச்சி & உதிரி பொருட்கள்

உணவகங்கள்

சலவைக்கூடங்கள்

சரக்கு மற்றும் கட்டிடம் சுத்தம் செய்வது

  1. கட்டுமானம் – அரசு திட்டங்களுக்கு மட்டும்
  2. தொழில்துறை உற்பத்தி – புதிய MIDA ஒப்புதல் பெற்ற முதலீடுகளுக்கு மட்டும்

விண்ணப்ப நடைமுறை:

விண்ணப்பங்களை துறையுடன் தொடர்புடைய ஏஜென்சிகள் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்; தனிப்பட்ட முதலாளிகள்/முகவர்கள் செய்ய முடியாது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் தொழில்நுட்பக் குழு (Technical Committee) மூலம் பரிசீலனை செய்து, இறுதி முடிவை கூட்டு குழு (Joint Committee) எடுக்கும்.

கோட்டா உச்சவரம்பு:

தற்போதைய உச்சவரம்பு: 24,67,756 வெளிநாட்டு தொழிலாளர்கள் (உற்பத்தி, கட்டுமானம், சேவைகள், தோட்டம், விவசாயம், வீட்டு உதவியாளர், சுரங்கம் & குவாரி துறைகள் அனைத்தும் அடங்கும்).

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles