
ஷாஆலம்:
மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் கேசவன், பெர்சத்து இளைஞர் பிரிவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தேசியக் கூட்டணியில் மஇகா, மசீச கட்சிகல் சேர விரும்புவதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், அவரது கட்சிக்கான முதல் அதிகாரப்பூர்வ அழைப்பைக் குறிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.
அவர்கள் எங்களை அழைத்தார்கள், அதனால் நான் இங்கே இருக்கிறேன்.
மஇகா தேசியக் கூட்டணியில் சேருவது குறித்து பரிசீலிக்கலாமா என்று அவரிடம் கேட்டதற்கு, அது எனது கட்சித் தலைவரைப் பொருத்தது என்று கேசவன் கூறினார்.

