ஹலால் நம்பிக்கையின் சின்னமாகும் – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர், செப் 20- ஹலால் தொழில் இப்போது உணவு மற்றும் பானத் துறையைத் தாண்டி, சுகாதாரம், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், சுற்றுலா மற்றும் இஸ்லாமிய நிதி போன்ற பரந்த சுற்றுச்சூழல் அமைப்பை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், ஹலால் துறை ஒருமைப்பாடு, நெறிமுறைகள் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான மதிப்புகளுக்கான பரந்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றும், ஹலாலை நம்பிக்கையின் சர்வதேச அடையாளமாகவும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளராகவும் ஆக்குகிறது என்று உலகளாவிய ஹலால் உச்சி மாநாடு (GHAS) 2025 மற்றும் மலேசிய சர்வதேச ஹலால் கண்காட்சியை (MIHAS) தொடங்கி வைத்து பின்னர் கூறினார்.

இதில் மலேசிய ஹலால் தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் தலைவரான துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹித் ஹமிடியும் கலந்து கொண்டார்.

மேலும், பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நயிம் மொக்தார், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் மற்றும் அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles