பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவின் 15வது ஆண்டு நிறைவு விழா! டத்தோஸ்ரீ நஜிப் தான் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா உருவாக காரணம்!:- டத்தோஸ்ரீ சரவணன்

டத்தோஸ்ரீ நஜிப் தான் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா உருவாக காரணம்!
:- டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், நவ.11-

பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்திய உருவாக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் காரா சாரம் உணவக உரிமையாளர் ஸ்ரீதரன் தலைமையில் அந்த பகுதியில் வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள் மாபெரும் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

இந்த பகுதி இப்படி உருமாற்றம் பெற மிக பெரிய அளவில் காரணமாக இருந்த ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சொல்வேந்தர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை இந்த நிகழ்ச்சி தலைமை தாங்க அழைத்ததோடு அவருக்கும் மிக பெரிய வரவேற்புடன் , மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழ வேண்டும், ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும் என்ற பாடலுக்கு ஏற்ப இந்த பகுதி மக்களால் மரியாதை செய்யப்பட்டார் டத்தோஸ்ரீ எம். சரவணன்.

அதன் பின் சிறப்பு உரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.
சரவணன் இந்த லிட்டில் இந்திய உருவாக நான் மட்டும் காரணம் அல்ல முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் இங்கு உள்ள வர்தகர்களும் என்றார்.

டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இங்கு வருகை புரியும் போது இங்குள்ள இந்த வர்த்தகர்களுக்கு என்ன தேவை என என்னிடம் கேட்டார். இந்த பகுதியில் அதிகமாக இந்தியர்கள் வர்த்தகம் செய்கிறார்கள். அதிகமான இந்தியர்களின் வருகையும் இங்கு அன்றாடம் உண்டும். ஆகவே சீனர்கள், மலாய்காரர்கள் அடையாளமாக பல பகுதி இருக்கிறது.

இந்த பகுதி லிட்டில் இந்தியவாக அழைக்கப் படவேண்டும் என தெரிவித்தேன்.

உடனே அன்றே செய்தியாளர்களிடம் இவ்விடம் லிட்டில் இந்தியாவாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.

அதன் அடிப்படையில் வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல் அன்றைய ஆண்டு 7ஆம் மாதம் வாக்கில் என்னை அழைத்து இந்திய பிரதமர் மலேசிய வருகிறார்.

பிரிக்பீல்ட்ஸ் பகுதியை 3 மாதத்தில் உருமாற்ற வேண்டும். நானும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் இதனை ஒரு சேர திறந்து வைக்க போகிறோம் என டத்தோஸ்ரீ நஜீப் தன்னிடம் கூறினார் என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் 3 மாதத்தில் இரவு பகல் பாராமல் இந்த இடம் கலாச்சார வடிவத்தோடு புதுபிக்கப்பட்டது. இதற்கு எனக்கு பக்கபலமாக இருந்தவர்கள் இங்கு உள்ள வர்த்தகர்கள் என்றார் சரவணன்.

நான் பதவியில் இருந்தபோது எனக்கு எப்படி மரியாதை கொடுத்தார்களோ அதே மரியாதையை இங்கு உள்ள மக்கள் எனக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள்.

பதவியில் இல்லாத சரவணனின் படம் வருட வருடம் லிட்டில் இந்தியாவை அலங்கரித்து வருகிறது. நாங்கள் பதவியில் உள்ளோம் எங்களுக்கு அந்த மரியாதை கிடைக்கவில்லை என சிலர் புலம்பி வருகிறார்கள்.

பதவியில் இருக்கும் போது சமுதாயத்திற்கு ஏதாவது பயனுள்ளதை செய்துவிட்டு போங்கையா?
எதையும் செய்யாமல் மரியாதை வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும் .

முதலில் மக்களுடன் மக்களாக வாழுங்கள். அவர்கள் சேவை செய்யுங்கள்.

பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் மரியாதை தானாக கிடைக்கும். மக்கள் மனதார மதிப்பார்கள் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles