தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் கட்சிகள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது!டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அதிரடி அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

செமினி டிச 14-
தேசிய முன்னணி கூட்டணியை விட்டு வெளியேறியதற்காக உறுப்பு கட்சிகள் வருத்தப்பட வேண்டாம் என்று நினைவூட்டுகிறோம்.

ஏனெனில் சம்பந்தப்பட்ட கட்சி மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தேசிய முன்னணி தலைவரும் துணை பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று அதிரடியாக கூறினார்.

பாரிசான் நேஷனல் (BN) உறுப்பு கட்சிகள் கூட்டணியில் ஏழு தசாப்தங்களாக நிலவிய நட்பின் வரலாற்றைப் பாராட்ட வேண்டும்.

அரசியல் முடிவுகளை உணர்ச்சிபூர்வமாக எடுக்கக்கூடாது என்றும், அரசியல் சூழல் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதால் அரசியலுக்கு பொறுமை மற்றும் பகுத்தறிவு ரீதியான பரிசீலனை தேவை என்றும் அவர் நினைவூட்டினார்.

குறிப்பாக எந்தக் கட்சியையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும், BN தலைவரின் அறிக்கை மஇகாவை குறிப்பதாக நம்பப்படுகிறது.

தேசிய முன்னணி மற்றும் ம இகா இடையே தற்போது கூட்டணிக்குள் இறுக்கமான உறவுகளை எதிர்கொள்கிறது.

பாரிசானில் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான நட்பு மற்றும் விசுவாசத்தின் வரலாற்றை மதிக்க வேண்டும்.

அதிருப்தி அல்லது ‘அதிகார போதை’ காரணமாக ஒதுக்கி வைக்கக்கூடாது.

“நாங்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருக்கிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல், ‘அதிகார போதை’ காரணமாக முடிவுகளை எடுக்காதீர்கள்.

சில கட்சிகள் கயிறு இல்லாமல் தொங்கும் நிலைக்குத் தள்ளப்படுமோ என்று நான் கவலைப்படுகிறேன் என்று இன்று காலையில் செமினி எக்கோ வோல்ட் மாநாட்டு மண்டபத்தில் ஐபிஎப் கட்சியின் 33 ஆவது தேசிய பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், செய்தியாளர் சந்திப்பின் போது, மஇகா பிஎன்னை விட்டு வெளியேறுவதற்கான ஏதேனும் தீர்மானத்தை அனுப்பியுள்ளதா என்று கேட்டபோது,
“நான் எந்தத் தீர்மானத்தையும் கடிதத்தையும் பார்க்கவில்லை.

நிச்சயமாக நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை, ஆனால் அவர்களால் ஒரு முடிவை எடுக்க முடியாவிட்டால், நாங்கள் ஒரு முடிவை எடுப்போம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles