
.கோலாலம்பூர், டிசம்பர் 14 – மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) வியாழக்கிழமை (டிசம்பர் 18) வரை பல மாநிலங்களை தொடர்ந்து பலத்த மழை பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் இயக்குநர் ஜெனரல் முகமது ஹிஷாம் முகமது அனிப் கூறுகையில், கிளாந்தான் மற்றும் திரங்கானு முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
இன்று ஒரு அறிக்கையில், குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின் உள்ளிட்ட பகாங்கின் சில பகுதிகளுக்கும், ஜோகூரில் உள்ள மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகியவற்றிற்கும் அதே அளவிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர், டிசம்பர் 14 – மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) வியாழக்கிழமை (டிசம்பர் 18) வரை பல மாநிலங்களை தொடர்ந்து பலத்த மழை பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், பேராக் (உலு பேராக் மற்றும் கோல கங்சார்) பகாங் (கேமரன் மலை, லிப்பிஸ், ஜெரண்டுட், தெமெர்லோ, மாரான் மற்றும் பிரா) மற்றும் ஜோகூர் (செகாமாட், குளுவாங், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு) ஆகிய இடங்களுக்கு இதே கால கட்டத்தில் தொடர்ச்சியான மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

