

கோலாலம்பூர் ஜன 30-
தமிழ்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு மலேசியாவில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசம் கலை கட்டி உள்ளது.
அந்த வகையில் தாய் கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து வெளி ரதம் இன்று பத்து மணிக்கு மேல் புறப்பட்டு பத்து மலையை நோக்கி புறப்பட்டது.
சிறப்பு அர்ச்சனைகளுக்கு பின்னர் வெள்ளி ரதம் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புடை சூழ புறப்பட்ட காட்சி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.

